search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒத்திவைப்பு தீர்மானம்"

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என கருதப்பட்டது.

    இந்நிலையில், மக்களவை தொடங்கிய உடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.

    மேலும், அவர்கள் தொடர் முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களவையை இன்று நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இதையும் படியுங்கள்.. அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது: பிரதமர் மோடி


    பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்தனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் பல்வேறு அமர்வுகளிலும் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி உள்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தனர்.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி, "வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் பதிவை உருவாக்க வேண்டும். அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல், "போராட்டத்தின்போது கடந்த ஓராண்டில் உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி" மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்தார் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்.

    தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., பினோய் விஸ்வம், ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்டோர் பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தனர்.

    இதையும் படியுங்கள்..  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது


    ரபேல் ஒப்பந்தம், ரிசர்வ் வங்கி பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர். #WinterSession #LokSabha #AdjournmentMotion
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது. இன்றும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.



    இந்நிலையில், ரிசர்வ் வங்கி விவகாரம், பணமதிப்புநீக்க விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    இதேபோல் ரபேல் விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி சுனில் குமார் ஜக்கார் மக்களவையில் மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளார். #WinterSession #LokSabha #AdjournmentMotion
    மேகதாது விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. #WinterSession #MekedatuIssue #AdjournmentMotion
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக அல்லாமல் நாட்டு மக்களின் நலனுக்காக இந்த கூட்டத்தொடரை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் ரிசர்வ் வங்கி விவகாரம், அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    ரிசர்வ் வங்கி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி. ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்.



    இதேபோல் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக சார்பில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அதிமுக எம்பி வேணுகோபால் கடிதம் கொடுத்துள்ளார். மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக, நவநீதகிருஷ்ணன் எம்பி நோட்டீஸ் கொடுத்துள்ளார். மேகதாது விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. #WinterSession #MekedatuIssue #AdjournmentMotion
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பேச, அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்ததால் சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். #DMK #adjournmentmotion
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

    இந்த கூட்டத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி  ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்தார்.



    இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்துவிட்டார். ஏற்கனவே இதுபற்றி விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதால், அதன்மீது பேசும்படி தி.மு.க. உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஆனால், தங்கள் தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததை தி.மு.க. உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். #DMK #adjournmentmotion

    சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. #TNAssembly #DMK
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

    காலை 10 மணிக்கு அவை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செ.மாதவன், கே.கே.ஜி.முத்தையா, சா.கணேசன், பி.அப்பாவு, ஆர்.சாமி, ஜெ.குரு என்கிற குருநாதன், பூபதி மாரியப்பன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.



    இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி  ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்தார்.

    ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் அது தொடர்பான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பிரச்சினைகளால் தமிழக சட்டப்பேரவையில் இன்று அமளி ஏற்படலாம் என்பதால், தலைமைசெயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #TNAssembly #DMK
    ×